அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகின்றனர். மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் விற்பனை செய்து முறைகேடு என்ற புகாரில் திருச்சி, அரியலூர், வேலூர், தஞ்சாவூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் ஆஜராகின்றனர். அனைவரும், குவாரி அனுமதி தொடர்பான ஆவணங்களோடு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.