‘திமுகவால் மாணவர்களின் கல்வி பாதித்துள்ளது’ - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

60பார்த்தது
‘திமுகவால் மாணவர்களின் கல்வி பாதித்துள்ளது’ - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டு மாணவர்கள் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ்நாட்டில் துணை வேந்தர் இல்லாத மூன்று பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. திமுக அரசின் மோதல் போக்கு காரணமாக மாணவர்களின் கல்வி நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.