வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் இன்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மலைப்பகுதியில் புதர்களுக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லிட்டர் கள்ள சாராயம் மற்றும் 500 லிட்டர் கள்ள சாராய ஊரல்களை கண்டுபிடித்த போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
மேலும் சாராயத்தை காய்ச்சி பதுக்கி வைத்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.