தேர் சரிந்து விழுந்ததில் ஒருவருக்கு காயம் - போலீஸ் விசாரணை!

6041பார்த்தது
வடமாவட்டங்களில் பிரபலமான மயான கொள்ளை திருவிழா, வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்றது.

இதில் விருதம்பட்டு, கழிஞ்சூர் மோட்டூர் வெண்மணி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காளபரமேஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வேலூர் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து சூரையாடல் நடைபெற்றது.

சூரையாடல் முடிந்து 3 தேர்களும் திரும்பும் சமயத்தில், மோட்டூர் வெண்மணி நகரை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. இதில் வெண்மணி நகரை சேர்ந்த விமல்ராஜ் என்பவர் சிக்கிக்கொண்டார். பின்னர் அவரை மீட்ட பொது மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணலால் நிலை தடுமாறி தேர் கீழே சரிந்து விழுந்ததாகவும், விழா முடியும் தருணத்தில், பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி