ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பாதபூசையா கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி, கோயில் வழக்கப்படி, சிவபெருமானுக்குப் படைக்கப்பட்ட எலுமிச்சை, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் சுமார் 15 பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் எலுமிச்சை பழத்தை ரூ.35 ஆயிரத்திற்கு வாங்கினார்.