நெமிலி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி குடோனில் தீ விபத்து!

77பார்த்தது
நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 46). இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனிக்கு சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும்கம் பெனியில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து அதனை மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று திடீரென குடோன் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி