ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையில் இரவு தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 77, 000 கொண்டு சென்றது தெரிந்தது.
அந்த பணத்தை வருவாய் கோட்டாட்சியர் பறிமுதல் செய்து வாலாஜா சார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.