ஷவரில் குளியல் போட்ட திருச்செந்தூர் கோயில் யானை

57பார்த்தது
தமிழகத்தில் கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் கடுமையாக தாக்கி வருகிறது. வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு விலங்குகள் ஆறு, குளங்களில் தண்ணீரில் குளியல் போட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அதற்காக கட்டப்பட்ட ஷவரில் பிரத்தியேகமாக குளியல் போடும் காட்சிகள் இணையத்தை கலக்கி வருகிறது. தெய்வானைக்காக ரூ.30 லட்சத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரத்தியேகமாக நீச்சல் குளம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

நன்றி: Updatenews360tamil

தொடர்புடைய செய்தி