பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் பள்ளிகொண்டா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக பைக்கில் மூட்டைகளை எடுத்து வந்த இரண்டு பேரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், முருகன் என்பதும் இவர்கள் பைக் மூலம் மூட்டைகளில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்குகளை பறிமுதல் செய்தனர்.