வீட்டின் சுவர் இடிந்து விழுந்து காயமடையந்த பெண் பலி!

71பார்த்தது
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஓங்கப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி (44). நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக அவரது வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி