கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது அவர்களிடமிருந்து 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு முத்துக்குமரன் மலை வனப்பகுதி சோதனை சாவடி அருகே வேப்பங்குப்பம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்களை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 1. வெங்கடேசன் 2. சிவசக்தி என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த சுமார் 60 லிட்டர் கள்ளச்சாராயம், கள்ளச்சாரய ஊரலுக்கு பயன்படுத்தக்கூடிய வெல்லம் 200 கிலோ மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் இந்த கள்ளச்சாராயங்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.