திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் மாதனூர் பகுதிகளில் உள்ள பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் மாதனூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிழல்குடை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.