ஆம்பூர் அருகே தீ பற்றி எரிந்த மூங்கில் மரங்கள்!

2604பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட ஊட்டல் பகுதியில் மலை அடிவாரத்தில் அடர்த்தியான மூங்கில் மரங்கள் இருந்தன இந்த நிலையில் திடீரென தீ பற்றி மளமளவென காட்டுத் தீ போல் பரவி வளர்ந்த மூங்கில் மரங்கள் மற்றும் மூலிகை செடி கொடிகள் தீயில் கருகி நாசமாகியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இரவு நேரத்தில் போராடியும் தீயை அனைக்க முடியாமல் காலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட தீ விபத்தா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துள்ளார்களா? என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி