தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர், "திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், செல்போன் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய உள்ளோம்" என பேட்டியளித்துள்ளார்.