திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வரதட்சணை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் 8 மாதங்களாக அலைக்கழிப்பதாக கூறி இளம்பெண்ணின் குடும்பத்தினர், காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாலட்சுமி என்பவரை அவருடைய கணவர் மணி முருகனின் குடும்பத்தினர் 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் நகை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.