இந்தியாவில் 2024-ம் ஆண்டில் பதிவான சுமார் 21,95,122 நாய் கடி சம்பவங்களில் 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 37 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை தகவல் வெளியிட்டுள்ளது. ஹரியானாவில் நடைபெற்ற நாய் கட்டி சம்பவம் தொடர்பான விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.