காவல்துறை மானிய கோரிக்கையில், வீரா என்கிற பிரத்யேக மீட்பு மற்றும் நிவாரண வாகனம் 0.73 கோடி செலவில் வழங்கப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளின் போது, நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், காயம் அடைந்தவர்களுக்கு விரைந்து மருத்துவ உதவி வழங்கிடவும், போக்குவரத்து இடையூறுகளை களையவும் இந்த வாகனம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.