வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

74பார்த்தது
வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் விழா இன்று (மே 26) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 73 அடி உயர தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேளங்கள் முழங்க, 'கோவிந்தா' என்ற கோஷத்துடன் பக்தர்கள் அந்த தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டத்தில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி