ரெமல் புயல் - 9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை

60பார்த்தது
ரெமல் புயல் - 9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவானது 'ரெமல்' புயலானது இன்று (மே 26) நள்ளிரவு கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் புயல் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ரெமல் புயல் தீவிரமடைவதால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.