“400 இடங்களில் பாஜக வெற்றி உறுதியாகி உள்ளது” - ராஜ்நாத் சிங்

50பார்த்தது
“400 இடங்களில் பாஜக வெற்றி உறுதியாகி உள்ளது” -  ராஜ்நாத் சிங்
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “400 இடங்களுக்கு மேல் வெற்றி என்பது வெறும் தேர்தலுக்கான கோஷமல்ல, பாஜகவின் தீர்மானம். 400 சீட் என்ற இலக்கை எட்டுவது ஆறுகட்ட தேர்தலுக்கு பின்பு உறுதியாகி உள்ளது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி