ராஜ்கோட் தீ விபத்து - எஸ்ஐடி குழு தீவிர விசாரணை

85பார்த்தது
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று (மே 25) டிஆர்பி கேமிங் மண்டலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட எஸ்ஐடி குழுவை சிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபி சுபாஷ் திரிவேதி நியமித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக அதிகாரிகள் நேற்று (மே 25) சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பல மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி