வள்ளலார் சர்வதேச மையம் - அறிக்கை அளிக்க உத்தரவு

71பார்த்தது
வள்ளலார் சர்வதேச மையம் - அறிக்கை அளிக்க உத்தரவு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் குறித்த வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தியஞான சபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்கக் கோரி, பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது பற்றி, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கு ஏப்ரல் 24ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி