வடகலை - தென்கலை : அசிங்கமாக பேசும் அர்ச்சகர்கள்..

80பார்த்தது
காஞ்சிபுரம் தேவராஜப் பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. யார் பிரபந்தம் பாடுவது? என்பதில் ஏற்பட்ட தகராறு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. முதலில் வீடியோ எடுத்தவரது செல்போனை ஒருவர் தட்டிவிடுகிறார் அதனைத் தொடர்ந்து இந்த தகராறு சூடு பிடிக்கத் தொடங்கியது. ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களை சமாதானம் செய்து கோயிலில் இருந்து வெளியேற்றினர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி