15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

15581பார்த்தது
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
நாமக்கல்: பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர். போக்சோவில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தைச் சோ்ந்தவர் ஆனந்தன் (24). இவர் ஜேடர்பாளையத்தில் உள்ள வெல்ல ஆலையில் பொக்லைன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். வெல்ல ஆலைக்கு அருகே வசித்த வந்த 15 வயது சிறுமியுடம் ஏற்பட்ட பழக்கத்தில் அவர் கா்ப்பமடைந்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்தனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி