பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை கைது!

69பார்த்தது
பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை கைது!
சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை என்பவரை போலீசார் இன்று (மே 25) கைது செய்தனர். மாஜர்கான் என்பவரிடம் ரூ.4 லட்சம் கடன் கொடுத்து விட்டு, அஞ்சலை ரூ.8 லட்சம் வாங்கியுள்ளார். மேலும், ரூ.9.5 லட்சம் தரச்சொல்லி மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாஜர்கான் போலீசில் புகார் அளித்ததன் பேரில், அஞ்சலை கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி