ரூ.80 லட்சம் பாக்கி - ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை

11741பார்த்தது
ரூ.80 லட்சம் பாக்கி - ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை
கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கர்நாடக வனத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியின் போது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருந்தார். அதற்கான கட்டணத்தில் ரூ.80 லட்சம் கடந்த ஓராண்டாக செலுத்தவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான வாடகை பாக்கியை விரைந்து செலுத்த வேண்டும் என்றும் தவறினால் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுக்கு ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி