முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் வாக்களித்தார் (வீடியோ)

70பார்த்தது
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி எம்.பி.,யுமான கவுதம் கம்பீர் இன்று (மே 25) வாக்கு செலுத்தினார். மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் வாக்களித்தார். வாக்களித்த பிறகு அனைவரும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கம்பீர் கேட்டுக் கொண்டார். வாக்களிக்கும் உரிமை மக்களின் சக்தியாகும் என்றார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது என்று கம்பீர் கூறினார்.

தொடர்புடைய செய்தி