இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ

81பார்த்தது
இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ
சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், எதிர்க்கட்சிகள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமாக சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி