தண்ணீர் பக்கெட்டிற்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி

63பார்த்தது
தண்ணீர் பக்கெட்டிற்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை பலி
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் பீம் (40). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கெட்டிச்சவீரில் உள்ள தனியார் நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, மூன்று பெண் குழந்தைகள், 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நேற்று (புதன்கிழமை) காலை பீமின் மனைவி துணி துவைப்பதற்காக பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி விட்டு வீட்டிற்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது ஒன்பது மாத பெண் குழந்தை தவழ்ந்து சென்று தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்தது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வந்து பார்த்து குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர்.