லாரி தலையில் ஏறி பரிதாப பலி.. (வீடியோ)

83பார்த்தது
சேலம்: எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (30). இவர் மேட்டூர் அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், பூலாம்பட்டி பிரதான சாலையில் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்துள்ளார். அங்கு, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, தலைக்கேறிய போதையில் நடுரோட்டில் தூங்கினார். அப்போது, ​​அவர் மீது டேங்கர் லாரி ஏறி இறங்கியது. இதில் லாரியின் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் தொடர்புடைய மேட்டூர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி