விஷச்சாராயத்தால் இறந்தவர் இறுதிச்சடங்கிலும் பாக்கெட் சாராயம்! அதிர்ச்சி தகவல்

61பார்த்தது
விஷச்சாராயத்தால் இறந்தவர் இறுதிச்சடங்கிலும் பாக்கெட் சாராயம்! அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. இதனிடையில் விஷச்சாராயம் குடித்து இறந்தவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்களும் பாக்கெட் சாராயம் குடித்தது அம்பலமாகியுள்ளது. அதன்படி முதலில் குடித்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அறிந்தும், மற்றவர்கள் விஷச்சாராயத்தை அருந்தியுள்ளனர். அங்கு சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு துடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.