நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்ட மாணவர்!

79பார்த்தது
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக்கொண்ட மாணவர்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதிய பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த மாணவர் அனுராக்(22), அரசுத் துறையில் உதவிப் பொறியாளராக இருக்கும் தனது உறவினர் மூலம் நீட் தேர்வுத் தாள்களை முறைகேடாகப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், "மே 4-ம் தேதி இரவு, அமித் ஆனந்த், நிதிஷ் குமார் என்ற நபர்களிடம் என் மாமா அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு நீட் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வழங்கப்பட்டது, அதை இரவோடு இரவாக படித்து மனப்பாடம் செய்தேன்" என அனுராக் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி