கண்ணமங்கலம்: மனித சங்கிலி அறப்போராட்டம்

63பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கண்ணமங்கலம் பேரூர் கழக நிர்வாகிகள், திமுக அரசாங்கத்தில் பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்ற செயலான சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டி மாபெரும் கண்டன மனித சங்கிலி அறப்போராட்டத்தை இணைந்து நடத்தினார்கள்.

இந்நிகழ்வில், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் S. இராமச்சந்திரன் , கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் R. M. பாபு முருகவேல் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் B. திருமால், கண்ணமங்கலம் பேரூர் கழகச் செயலாளர் M. பாண்டியன், அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி