கள்ளக்குறிச்சி - Kallakurichi

மூங்கில்துறைப்பட்டு: பாலம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டு: பாலம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தை கண்காணிப்பு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை உள்ள இருவழிச் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றி பணிகள் நடந்து வருகிறது. இதில், மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று, திருவண்ணாமலை கண்காணிப்பு கோட்ட பொறியாளர் கிருஷ் ணசாமி ஆய்வு செய்தார். அப்போது, பணியின் தரம் குறித்தும், மழைக் காலம் துவங்க இருப்பதால் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி கோட்டை பொறியாளர் நாகராஜன், உதவி பொறியாளர் சர்மா உடனிருந்தனர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: உட்கோட்டத்தில் 1, 031 வாகனங்கள் சோதனை
Oct 06, 2024, 06:10 IST/ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம்

கள்ளக்குறிச்சி: உட்கோட்டத்தில் 1, 031 வாகனங்கள் சோதனை

Oct 06, 2024, 06:10 IST
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் கடந்த 2 தினங்களாக போலீசார் 1, 031 வாகனங்களை சோதனை செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேரத்தில் 3 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட எஸ். பி. , ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார், கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இரவு 7: 00 மணியில் இருந்து 10: 00 மணி வரை பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், 1, 031 வாகனங்களை சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டியது 21 வாகனங்களும், மது அருந்தி ஓட்டியது என 27 வாகனங்களும் பறிமுதல் செய்து அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.