மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா

76பார்த்தது
.

கள்ளக்குறிச்சி மாவட்டம், காரனூர் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய அரசின் ADIP திட்டத்தின்கீழ் ALIMCO நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் சமூக வலுவூட்டல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் தே. மலையரசன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜெ. மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் , கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி