மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை

64பார்த்தது
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள்(65). இவர் கடந்த 6 மாதங்களாக இடது முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட வலி காரணமாக செய்யாறில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த எலும்பு மருத்துவர் சந்திரன், எல்லம்மாளுக்கு மூட்டு தேய்மானம் அடைந்திருப்பதை கண்டறிந்தார். இதற்காக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, செய்யாறு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி எலும்பு மருத்துவர்கள் சந்திரன், விமல்ராஜ், புகழேந்தி, மயக்க மருத்துவர்கள் பிரதீபா பாரதி, விஷ்ணுபிரியா, செவிலியர்கள் தயாசேகரி, இந்திரா, கமலா ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 31ம் தேதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செய்யக்கூடிய இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் தற்போது செய்யாறில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி