செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

2600பார்த்தது
செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், அத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் நேதாஜி(22). இவா், மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் முடிதிருத்தும் கடை வைத்துள்ளாா். அதே கிராமத்தைச் சோ்ந்தவா் பூபதி (22). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இருவரும் நண்பா்கள் ஆவாா்கள்.

பூபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக வாங்கியிருந்த பைக்கில் இருவரும் திங்கள்கிழமை மாலை காழியூா் கிராமத்துக்குச் சென்றனா். பைக்கை பூபதி ஓட்டிச் சென்றாா். அங்கிருந்த பால்கோவா தயாரிப்பு நிறுவனம் அருகே சென்ற போது பைக் நிலை தடுமாறி விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும், அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு நேதாஜி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பூபதிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி