பள்ளி மாணவனை ஆபத்தான செயலில் ஈடுபடுத்திய ஊராட்சிமன்ற தலைவர்

77பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு ஊராட்சியில் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றுவதற்காக, அரசு துவக்கப்பள்ளி மாணவனை ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஏற வைத்துள்ளார். அந்த கொடிக்கம்பத்தின் அருகில் மின்சார கம்பி இருக்கும் நிலையில் உயிருக்கு ஆபத்தான முறையில் பள்ளி மாணவனை ஏறவிட்டு தேசியக்கொடி ஏற்றும் கயிறை கொடிக்கம்பத்தின் உச்சியில் உள்ள வளையத்துக்குள் நுழைக்க செய்த ஊராட்சி மன்ற தலைவரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக பொரசப்பட்டு செயல் அலுவலர் சுரேஷ் குமாரிடம் கேட்டபோது தனக்கு வீட்டில் வேலை உள்ளதாக அலட்சியமாக கூறினார்.

தொடர்புடைய செய்தி