மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

83பார்த்தது
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா்.

முகாமில், வங்கிக் கடன் கோரி விண்ணப்பித்த 8 பேருக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கக் கோரி 5 மனுக்களும், சக்கர நாற்காலி கோரி 2 மனுக்களும், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரி 3 மனுக்களும், செயற்கை கால் கோரி 2 மனுக்களும் பெறப்பட்டன. இந்த
முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை கோரி 358 போ் விண்ணப்பங்கள் அளித்தனா். இவா்களில், தகுதியான 216 பேருக்கு மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் அடையாள அட்டைகளை வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி