ஆரணி அருகே திருட்டு சம்பவம்

61பார்த்தது
ஆரணி அருகே திருட்டு சம்பவம்
திருவண்ணாமலை அடுத்த செல்வ விநாயகர் பகுதியில் வசிக்கும் சுந்தரமூர்த்தி மகன் ஆனந்தன் என்பவர் வீட்டில் 9. 5 பவுன் நகை மற்றும் 4000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆனந்த் அவர்களின் தந்தை சுந்தரமூர்த்தி கொடுத்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களின் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி