விபத்தில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்த எம்பி

72பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டு காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை, இன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான தரணிவேந்தன் நேரில் சென்று நலம் விசாரித்து மருத்துவர்களிடம் அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்து தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கும் அவர்களை உடனடியாக அனுப்புமாறு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட அவைத்தலைவர் R. ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் R. சிவானந்தம், KV. ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி, ஆரணி தொகுதி பொறுப்பாளர் SS. அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி