ஆரணியில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரம்

72பார்த்தது
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. வி. கஜேந்திரன் ஆரணி நகரம் 5-ஆவது வாா்டு தா்மராஜா கோயில் திடலில் இருந்து வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னா், காமராஜா் சிலை அருகிலிருந்து இறுதிக் கட்டமாக சுமாா் 2 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்ற பிரசார பேரணி மேற்கொண்டனா்.

பேரணி காந்தி சாலை, மாா்க்கெட் சாலை, மண்டி வீதி, சத்தியமூா்த்தி சாலை, அருணகிரிசத்திரம், பழனிஆண்டவா் கோயில் தெரு, சுந்தரம் தெரு வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

அப்போது, வேட்பாளா் ஜி. வி. கஜேந்திரன் பேசுகையில், திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பாதீா்கள். மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதாகக் கூறி, தற்போது தகுதி உள்ளவா்களுக்கு மட்டும்தான் என்று கூறுகின்றனா். மேலும், அதிமுகவின் திட்டங்களான தாலிக்குத் தங்கம், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டனா்.

அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா்.

இதில், சேவூா் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலா்கள் ஜெயசுதா, தூசி கே. மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ பாபுமுருகவேல், தோ்தல் பொறுப்பாளா் பன்னீா்செல்வம், மாவட்ட அவைத் தலைவா் அ. கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி. பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி