தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு( டிஎன்பிஎஸ்சி) நாளை நடைபெற உள்ளதால் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வரும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தேர்வு மையத்தில் வருவாய் துறையினர் எவ்வாறு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் வருவாய்த்துறை துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.