பூங்கொத்துடன் வந்து கலெக்டரிடம் மனு

64பார்த்தது
திருப்பூரில் மிக முக்கிய சாலையான காங்கயம் கிராஸ் ரோடு சாலை முதல் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை சாலையை பல வருடங்களாக ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். சாலை விரிவாக்க பணி செய்த பின் பும் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அந்த சாலையை ஆக்கிர மித்து வியாபாரம் செய்து வருவதால் சிறிய சாலையாக மாறியுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் நடைபாதை இல்லா மல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வாகன ஓட்டிகள் நெருக்கடி இல்லாமலும் விபத்தினை தவிர்த்தும் பயணிக்க முடியும். மேலும் அந்த பகுதியில் கடைக்கு முன் பாக வாகனத்தை நிறுத்துவதற்கு தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி சாலையில் வாகனங்கள் நிறுத்தி இடையூறு ஏற்ப டுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்.

உரிய தீர்வு

இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் கட்டிட உரிமையாளர்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு ஏற்படுத்த வேண் டும். அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை களில் எவ்வித அடையாளங்கள் இல்லாததால் வேகத்தடை தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துகள் ஏற்படு கிறது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி