உடுமலை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை, சின்னாம்பாளையம், எலைய முத்தூர், தென்குமாரபாளையம், விளாம்பரத்துப்பட்டி, தளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 22 விவசாயிகள் 257 மூட்டை அளவுள்ள 12 ஆயிரத்து 850 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். 

இதில் 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன்படி முதல் தர கொப்பரை ரூ. 138 முதல் ரூ. 147.99 வரையிலும் 2-ம் தர கொப்பரை ரூ. 117.99 முதல் ரூ. 133.99 வரையில் ஏலம் போனது. இந்த தொகையானது விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி