காடையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் பலலட்சம் பேர் சாமி தரிசனம்

55பார்த்தது
காங்கேயம் காடையூரில் முழுகாத கூட்டத்திற்கு சார்ந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் ஆகிய கோவில் உள்ளது. இந்த கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் ஆகம விதிப்படி திருப்பணிகள் செவ்வனே செய்யப்பட்டும் , அதைத் தொடர்ந்து இந்த கோவிலின் கும்பாபிஷேக பணிகள் தொடங்கி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் ஓதி, புனித நீர் கலசங்களுக்கும்  சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சிம்ம லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆன்மிகத்தினர் திரளான பக்தர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். 300 காவலர்கள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி