புதுப்பையில் சாலை மறியல் மற்றும் வட்டாட்சியர் சிறை பிடிப்பு

573பார்த்தது
புதுப்பையில் தாராபுரம் வட்டாட்சியர்  பொதுமக்களால் சிறைபிடிப்பு - வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆற்றில் அமர்ந்து போராட்டம் -  பரபரப்பு ஏற்பட்டது


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பையில் பாயக்கூடிய அமராவதி ஆற்றில் முறைகேடாக கிணறு அமைத்து தாராபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மூலனூருக்கு குடிநீர் எடுத்ததை தொடர்ந்து புதுப்பை பகுதி பொதுமக்கள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் வட்டாட்சியரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி