எலி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட காவலர்

57பார்த்தது
எலி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட காவலர்
தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளாம்பெரம்பூரை சேர்ந்த புகழேந்தி (43) போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கடன் பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்த புகழேந்தி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டார். மயங்கிய அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி