நயினார் நாகேந்திரன் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

65பார்த்தது
நயினார் நாகேந்திரன் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஏற்கனவே சம்மன் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி சென்னையிலிருந்து நெல்லைக்கு சென்ற ரயிலில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது. இதை எடுத்துச் சென்ற நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி