திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலையில் உள்ள மீனாட்சி மகாலில், காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் குண்டடம் கிழக்கு ஒன்றியங்களை சேர்ந்த கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.